சவூதியில் தப்லீக் ஜமாஅத் தடை: “உலமா சபை தெளிவுபடுத்த வேண்டும்”

இலங்கை தப்லீக் ஜமா அத் அமைப்பின் தலை­வ­ராக ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலை­வரே செயற்­பட்டு வரு­கிறார். இலங்கை முஸ்­லிம்­களை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றது. இந்­நி­லையில் சவூதி அரே­பி­யாவில் தப்லீக் ஜமா அத் அமைப்பு தடை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் உலமா சபை தனது நிலைப்­பாட்­டினைத் தெளி­வு­ப­டுத்த வேண்­டு­மெ­னவும், பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்டும் எனவும் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

இரா­ஜ­கி­ரியில் பொது­பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது: சவூதி அரே­பியா அர­சாங்கம் தப்லீக் ஜமா அத் அமைப்பை தடை செய்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. அநே­க­மான இஸ்­லா­மிய நாடுகள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பார தூரத்­தன்­மையை தற்­போது விளங்கிக் கொண்­டுள்­ளன. அத்­தோடு தங்கள் தவ­று­க­ளையும் திருத்திக் கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வலுப்­பெ­று­வ­தற்கு பிர­தான கார­ணி­யாக இருக்கும் தப்லீக் ஜமா அத் அமைப்பைத் தடை செய்­வது பற்றி அர­சாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கிழக்கு மாகா­ணத்தில் வாழும் பாரம்­ப­ரிய, சுதேச முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரது செயற்­பா­டு­க­ளுக்கு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் பெரும் தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அண்­மையில் கிழக்கு மாகா­ணத்­திற்கும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­லணி உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தது. மட்­டக்­க­ளப்பு, காத்­தான்­குடி ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள பாரம்­ப­ரிய முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருடன் பேச்சு வார்த்­தை­களை மேற்­கொண்டோம். கிழக்கு மாகா­ணத்தில் வாழும் பாரம்­ப­ரிய சுதேச முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய அமைப்­புகள் பெரும் தடை­களை ஏற்­ப­டுத்­த­யுள்­ளமை அறியக் கிடைத்­தது. இலங்­கையில் வலுப்­பெற்­றுள்ள அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் குறித்து அர­சாங்­கமும் பாது­காப்பு அமைச்சும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை உள்­ளிட்ட தரப்­பினர் தற்­போது முன் வைக்கும் கருத்­துகள் முற்­றிலும் தவ­றா­னவை. அடிப்­ப­டை­வா­தி­களின் நோக்கம், இலக்கு, அவர்கள் திட்­ட­மிட்­டுள்­ள­வைகள் பற்றி நாம் தாக்­குதல் இடம் பெறு­வ­தற்கு முன்பே தெரி­வித்து வந்தோம்.

தப்லீக் ஜமா அத்தின் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து நாம் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே குறிப்­பிட்டு வரு­கிறோம். இஸ்­லா­மிய அடைப்­ப­டை­வாதம் இலங்­கையில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கங்கள், அதனால் ஏற்­ப­ட­வுள்ள எதிர்­கால விளை­வுகள் என்­பன குறித்து நாம் பகி­ரங்­கப்­ப­டுத்­து­கையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், அர­சியல் வாதி­களும் கவனம் செலுத்­த­வில்லை. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்று ஒன்று இல்லை. பொதுபல சேனா இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவித்து இனவாதத்தைத் தூண்டுகிறது என்று எம்மீதே குற்றம் சுமத்தினார்கள். எம்மை இனவாதிகளாக சித்தரித்தார்கள். தப்லீக் ஜமா அத்தை சவூதி அரசு தடைசெய்ததன் பின்பாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றார்.

(ஏ..ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2021-12-23

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page