தொடர்ந்தும் (24-04-20) அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு விபரம்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களுக்கு இன்று இரவு 8 மணி முதல் மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

குறித்த மாட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page