நாளொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு பாதி தேங்காய் போதுமானது

சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு பாதி தேங்காய் போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும தெரிவித்தார்.

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 சதவீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தேங்காய் பால் எடுக்கும் போது கையால் பிழிந்தால் 20-30 வீதம் அளவில் தேங்காய் பால் கிடைத்தாலும், அரைப்பான் (Grinder), திரிகைக்கல் ஊடாக அரைத்து எடுக்கும் போது 50 வீதத்திற்கும் அதிமான அளவு தேங்காய் பால் பெறமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

-தமிழன்.lk

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page