தரம் 6 – 13 வரையிலான அனைத்து அர பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய, காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் கனிஷ்ட பிரிவுகளுக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை, கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page