1400 பள்ளிகள் தன்னிச்சையாக நடக்கின்றன.. நிதி ஊழல் மோசடிகள் நடக்கின்றன.

நாட்டில் சுமார் 1400 பள்­ளி­வா­சல்கள் வக்பு சபை­யுடன் தொடர்­பு­களைப் பேணாது தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­கின்­றன.
இவற்றில் பல பள்­ளி­வா­சல்­களில் நிதி ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன.

அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களின் சட்­ட­ரீ­தி­யற்ற நிர்­வா­கங்கள் கலைக்­கப்­பட்டு ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்டும்.  வக்­பு­ச­பையின் தொடர்­பு­களைப் பேணாது தன்­னிச்­சை­யாகச் செயற்­படும் நிர்­வா­கங்­க­ளுக்கு  எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்க வக்­பு­சபை தீர்­மா­னித்­துள்­ளது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

வக்­பு­ச­பையின் தலைவர் இது தொடர்பில் தொடர்ந்தும் ‘விடி­வெள்ளி’ க்குக் கருத்து தெரி­விக்­கையில்,  இவ்­வா­றாக தன்­னிச்­சை­யாக  செயற்­படும் பள்­ளி­வா­சல்கள் நீண்ட கால­மாக வக்பு சபை­யுடன் தொடர்­பு­க­ளின்றி இருக்­கின்­றன. அவற்றின் வரவு செல­வுகள் என்­பன வக்பு சபைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. நிர்­வாக சபை­யி­லுள்ள சிலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன. இவ்­வா­றான நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. வக்பு சபையின் சட்­ட­வி­தி­க­ளுக்கு அமைய அவர்­க­ளுக்கு எதி­ராக நீதீ­மன்றின் மூலம் நட­வ­டிக்கை எடுக்க முடியும்.

வக்பு சொத்­துகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். வரவு செல­வுகள் வரு­டாந்தம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும் இவ்­வாறு வரவு செலவு சம்ர்ப்­பிக்­கப்­ப­டாது ஒரு சில நிர்­வா­கிகள் மோச­டி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்றார்.

இதே­வேளை கொரோனா வைரஸ் கார­ண­மாக  சுமார் 300 பள்­ளி­வா­சல்­களின் பத­விக்­காலம் முற்­றுப்­பெற்றும் புதிய நிர்­வா­கங்கள் தெரிவு செய்­யப்­ப­டா­துள்­ளன. தற்­போது கொரோனா வைரஸ் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் உள்­ளதால் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் ஜமா­அத்­தாரைக் கூட்டி ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்­களைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லைக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறும் 300 பள்ளிவாசல்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.-

Vidivelli (ஏ.ஆர். ஏ. பரீல்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page