செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு

உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter