இரு கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியானது

நாட்டில் இதுவரையில் 10,579,220 பேருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று 13,497,826 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 1,438,065 பேருக்கும் முதற்கட்டமாகவும், 8,92,185 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று 10 697 335 பேருக்கு முதற்கட்டமாகவும், 8,647,025 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

1,59,089 பேருக்கு முதற்கட்டமாகவும், 43,450 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று 4,48,382 பேருக்கு முதற்கட்டமாகவும், 2,40,569 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

7,72,955 பேருக்கு முதற்கட்டமாகவும், 7,55,991 இரண்டாம் கட்டமாகவும் மொரட்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு;ளளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

-வீரகேசரி-

(எம்.மனோசித்ரா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page