ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்பட்டுள்ளார்

பிரேத பரிசோதனையில் உறுதி; பலரிடம் வாக்குமூலம் பதிவு; பொலிஸ் பேச்சாளர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதி யுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப் பெண்ணாக பணிபுரிந்து எரிகாயங்களு க்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசார ணைகளை பொரளை பொலிஸாருடன் இணைந்து கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் முன் னெடுத்து வருகின்றது.

குறித்த சிறுமியை பணிக்கு அழைத்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் தந்தை, தாய் ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் மரண பரிசோ தனையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். (எம்.மனோசித்ரா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page