ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி,

இலங்கையில் மேலும் 4 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 29 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2622 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 242 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter