கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை எளிதில் தாக்கும்? அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

Dr. சரவணன் விளக்கம்

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?

மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. பாக்டீரியா வைரஸ் போல காற்றிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. அவை மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும் பின்னர் மூளைப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கண் பார்வை இழப்பு உறுப்புகள் பாதிப்பு உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.

யாரை எளிதில் தாக்கும்?

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள், கொரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவர்கள் நோய் எதிர்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை.

அறிகுறிகள் என்ன?

தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், வாய்இமூக்கு,

கண் பகுதிகள் கருப்பாக மாறுதல், கண்ணில் வலி மற்றும் வீக்கம்,சைனஸ் பாதிப்பு திடீரென பார்வை குறைதல்.

கல்யாணத்தில் கறி விருந்து.. விழாவை சிறப்பித்த மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று! கல்யாணத்தில் கறி விருந்து.. விழாவை சிறப்பித்த மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!

பாதிப்பு அதிகரித்தது ஏன்?

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்ததன் விளைவாக ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்டீராய்டு சிகிச்சையால் நோய் எதிர்பாற்றல் குறைந்தவர்கள், அதன் பின்னர் அதனை மேம்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தற்பொழுது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் தாமாகவே வீட்டிலேயே குழாய் நீரை பயன்படுத்தி நீராவி பிடித்துக் கொள்ளும் காரணத்தினாலும் இந்நோய் அதிகரிக்கிறது.

சிகிச்சைகள் என்ன?

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சையளிக்க வேண்டும்.சிலருக்கு பல்நோக்கு சிகிச்சைகள் அவசியம். குறிப்பாகஇ காதுஇ மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சைகள் ரத்த நாள சிகிச்சை முறைகள் கண் சிகிச்சை முறைகள் நரம்பியல் சிகிச்சைகள் மூளை சார்ந்த சிறப்பு சிகிச்கைள் மூளை சார்ந்த சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

எப்படித் தடுப்பது?

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் நோய் எதிர்பபு சக்தியை மேம்படுத்துதல், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு காது மூக்கு தொண்டை பரிசோதனை செய்தல்இ ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிடுவது மது புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்.

கண் மருத்துவ நிபுணர் Dr. எஸ்.ராமகிருஷ்ணன் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் மக்கள் தத்தளித்து கொண்டு இருக்கும் நேரத்தில், தற்போது கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறித்த தகவல் மக்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள், பாதிப்புகள், அதன் தன்மைகள் குறித்து சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இதுவரையில் கேள்விப்படாத நோயாக கருப்பு பூஞ்சை என்ற ஒரு நோய் இப்போது திடீரென தமிழ்நாட்டில் தாக்க தொடங்கி இருக்கிறதே? கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) என்றால் என்ன?

பதில்:- கேள்விப்படாத நோய் இல்லை. இது பல காலமாகவே இருந்து வருகிறது. மண், அழுகிப்போன மரம், இலைகள் ஆகியவற்றில் இது இருக்கும். காற்றில் பறந்து வந்து, வெட்டுக்காயங்கள் வழியாகவும், மூக்கு துவாரங்கள் மூலமாகவும் உடலை தாக்கும். இது பெயருக்கு தான் கருப்பு பூஞ்சை. உண்மையில் இதன் நிறம் வெள்ளையாகத் தான் இருக்கும். உடல் பகுதியில் ஒரு இடத்தை தாக்கி, அதனை அழுகும் நிலைக்கு கொண்டு சென்று, அந்த பகுதியில் கருப்பாக மாறிவிடும். அதனால்தான் இதற்கு கருப்பு பூஞ்சை என்று பெயர்.

கேள்வி:- கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களே? அப்படியானால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோயினால் அபாயம் அதிகமாக இருக்குமா?

பதில்:- தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து இருப்பார்கள். இந்த கருப்பு பூஞ்சை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத்தான் தாக்குகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் 2 முதல் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்த நோய் வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- இந்த நோய்க்கான அறிகுறிகளாக என்ன வரும்?

பதில்:- தொண்டையில் கெட்டிச்சளி, மூக்கடைப்பு, தலைவலி என ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கும். அதன்பிறகும் கவனிக்காமல் விட்டால், கண் பகுதியை பாதித்து, முதலில் இமை பகுதியை தாக்கி, கண் சிவந்து அல்லது வீக்கத்துடன் இருப்பது, இரட்டை பார்வையாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னர் பார்வை நரம்புகளை அழுகச் செய்யும். இதனால் பார்வையிழப்பு ஏற்படும். அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் மூளைப்பகுதிகளை தாக்கி, மூளைக்காய்ச்சல் நோயினால் மரணத்தை கூட சந்திக்க நேரிடும்.

கேள்வி:- இந்த நோயினால் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?

பதில்:- நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும். எனவே அவர்கள் தங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்ள வேண்டும்.

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page