நாடு மீண்டும் முடக்கப்படுமா? இறுதித் தீர்மானம் இன்று !

இலங்கையில் புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா அபாய நிலைமையையடுத்து, நாடளாவிய ரீதியிலோ அல்லது சில பகுதிகளையோ மூடுவது குறித்து இன்று (23) இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் நாடு மூடப்படாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதன்படி, எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்து ஜனாதிபதி இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page