இம்முறை ஹஜ் வழிபாடுகளுக்கு 1000 யாத்திரிகர்கள்

இம்முறை ஹஜ் வழிபாடுகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட யாத்திரீகர்களையே அனுமதிக்கவுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை 29ம் திகதி ஹஜ் வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்போது வெறும் 1000 யாத்திரர்களையே அனுமதிக்கவுள்ளதாகவும் குறித்த அரசு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த யாத்திரர்கள் அனைவரும் வழிபாடுகள் நிறைவுக்கு வந்ததும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியர்களின் ஹஜ் கடமைக்கு சுமார் 25 இலட்சம் யாத்திரர்கள் வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ் கடமைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஈடுபட்டு வருவதாக சவூதி ஹஜ் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் கடமைக்கான ஒரு நடைமுறையாகவே இது முன்னெடுக்கப்படுகிறது. தற்போது சவூதியில் வசித்து வரும் 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளி மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகள் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஹஜ் கடமையில் சுமார் 1,000 யாத்திரிகர்கள் வரையே பங்கேற்கவிருப்பதோடு முகக்கவசம் அணிவது, வழிபாடுகளின்போது சமூக இடைவெளியை பேணுவது மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

ஹஜ் கடமைக்குப் பின்னரும் யாத்திரிகர்கள் இரண்டாம் கட்ட தனிமைப் படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்களை ஈர்க்கின்றன, மேலும் ஆண்டொன்றுக்கு அவரை 12 பில்லியன் டொலர்களையும் வருமானமாக ஈட்டித் தருகின்றது.

இந் நிலையில் இந்த முடிவானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவின் பொருளாதாரத்திற்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் 253,349 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 2,523 ஆக பதிவாகியுள்ளது

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page